உக்ரைனுக்கு மனிதக் கடத்தலில் ஈடுபட்ட தம்பதி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

CID - Sri Lanka Police Sri Lanka Ukraine
By Sathangani Mar 18, 2024 06:16 AM GMT
Report

உக்ரைன் இராணுவத்தில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த தம்பதியரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (17)உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற விசாரணை பிரிவில் நேற்று சரணடைந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்திற்குரிய தம்பதியினர் கடவத்தை பிரதேசத்தில் வசித்து வருவதுடன், கணவர் பொருளியல் ஆசிரியராக பணிபுரிகின்றவராவார்.

ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூர் அணி படைத்த சாதனை

ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூர் அணி படைத்த சாதனை

உக்ரைன் இராணுவத்தில் வேலைவாய்ப்பு 

உக்ரைன் இராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, குறித்த தம்பதியினர் இந்த நாட்டை விட்டு 55 பேரை அனுப்பியுள்ளனர். இவர்களில் இராணுவத்தில் பணியாற்றிய ஒரு குழுவினரும் உள்ளடங்குகின்றனர்.

உக்ரைனுக்கு மனிதக் கடத்தலில் ஈடுபட்ட தம்பதி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Sl Couple Engaged In Human Trafficking To Ukraine

சந்தேகநபர்கள் உக்ரைன் இராணுவத்தின் தளபதியாக கடமையாற்றி தற்போது உயிரிழந்துள்ள ரனிஷ் ஹெவெகேவின் ஒருங்கிணைப்புடன் குறித்த தரப்பினரை உக்ரைனுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் இலங்கையில் இருந்து வெளியேறும் நபர்கள் இந்தியா வழியாக போலந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாகவும்,  இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து சந்தேகநபர்கள் 02 முதல் 05 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தானியங்களை கொள்வனவு செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தானியங்களை கொள்வனவு செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

அஜர்பைஜானுக்கு சென்றுள்ள குழு

நாட்டை விட்டு வெளியேறியவர்களில் சிலர் உக்ரைனுக்கு சென்றுள்ள போதும் மேலும் சிலர் போலந்துக்குள் செல்ல முடியாமல் நாடு திரும்பியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு மனிதக் கடத்தலில் ஈடுபட்ட தம்பதி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Sl Couple Engaged In Human Trafficking To Ukraine

மற்றுமொரு குழு அஜர்பைஜானுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றச் சென்றவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி  காவல்துறை மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரைக்கமைய, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் தலைமையில், ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள பேரினவாதத்தின் அடாவடித்தனம்! ஈழத்தமிழர்களை கண்டுகொள்ளாத இந்தியா..

சிங்கள பேரினவாதத்தின் அடாவடித்தனம்! ஈழத்தமிழர்களை கண்டுகொள்ளாத இந்தியா..


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!




ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023