அழிவின் விளிம்பில் இலங்கை!! மாற்றுத் திட்டம் தொடர்பில் எதிரணி ஆலோசனை
ராஜபக்ஷர்களின் ஆட்சி தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்தார்.
கண்டியில் வைத்து இன்று(29) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், அரச தலைவர் நிறைவேற்று அதிகாரத்தினைப் பயன்படுத்தி சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கையினை இழந்துள்ளனர்.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்குமாயின் பாரிய அழிவுகள் ஏற்படும். இதனால், மக்களின் சுகாதார நல விடயத்தில் அரசாங்கம் அவதானிப்புடன் செயற்பட வேண்டும்.
மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கான பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கின்றது. மாற்றுத் திட்டம் குறித்து அரசாங்கம் சிந்திக்கத் தவறிய காரணத்தினால் இன்று மின்சார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
மின்சார தடை வீட்டில் உள்ளவர்களுக்கு மாத்திரம் பிரச்சனையல்ல, மாறாக நாட்டின் பொருளாதாரத்திற்கே பாரிய அழிவு.
இது தொடர்பில் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.