எதிராளிகள் சூட்டிய பௌத்தவிரோத மார்க்கை நொருக்கும் அநுர...!
இலங்கையில் தற்போது அமெரிக்காவின் மொன்டானா தேசிய படைக்குழு தனது இராணுவப் பொறியியல் பிரிவைக் களமிறக்கிய நிலையில் இப்போது இந்தியாவும் இலங்கைக்கு மேலும் பத்து பெய்லி பாலங்களை இறக்கித் தனது இராணுவப் பொறியியல் பிரிவின் பிரசன்னத்தை உறுதிப்படுத்தியதாகத் தெரிகிறது.
இருப்பினும், இந்தியா இவ்வாறு பெய்லி பாலங்களை அனுப்பி கொழும்புக்கு உதவிக்கொண்டிருந்தாலும் இந்தியாவில் இருந்து இதுவரை ஒருபோதும் வெளியே அனுப்பப்படாத புத்தரின் புனிதச் சின்னங்களைக் குஜராத்தில் இருந்து கொழும்பு கங்காராமய விகாரைக்கு அனுப்பி ஒரு வார காலத்திற்கு அதனைச் சிங்கள பௌத்தர்கள் 24 மணிநேரமும் தரிசிக்க வழிசெய்தாலும், உள்ளூர் வீடமைப்புத் திட்டத்தில் இந்தியப் பூர்வீகத்தைக் கொண்ட மலையக மக்கள் ஓரங்கட்டப்படுவதான ஒரு குற்றச்சாட்டு ஐ.நாவிடம் முன்வைக்கப்படும் வகையில் பழைய சிஸ்டம்கள் (Systems) தொடர்கின்றன.
அநுர அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது சிஸ்டம் சேஞ்ச் (System Change) என உதட்டளவில் கூறினாலும் உண்மையான முறைமை மாற்றம் இல்லையென்பதை சிறிலங்காவின் பெண்கள் ஆணையத் தலைவர் ரமணி ஜெயசுந்தரா தனது பதவியை அண்மையில் துறந்த நகர்வு ஆதாரப்படுத்தும் நிலையில், இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது செய்திவீச்சு…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்