மே 17 வரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் காவல்துறையின் வீதித்தடையினை மீறி நாடாளுமன்ற வளாகத்திற்குள் உட்செல்ல முற்பட்ட போது, அவர்கள் மீது காவல்துறையினால் நீர்த்தரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய சபை அமர்வில் சுட்டிக்காட்டியுடதுடன், உடனடியாக சபாநாயகரை சபை அமர்விற்கு அழைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அத்துடன், அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் விவாதிப்பதற்கான காலத்தையும் உடனடியாக பெற்றுத்தருமாறு அவர்கள் கோரியிருந்தனர்.
இதனால் நாடாளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில், சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைப்பதாக சபைக்கு தலைமைத்தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே அறிவித்தார்.
இதனையடுத்து சபை நடவடிக்கை மீண்டும் ஆரம்பமான போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பங்கேற்றதுடன், எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.


