பாதாள கும்பல் விவகாரத்தில் தீவிரம் காட்டும் அரசாங்கம்!
கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்தால் பாதாள உலகம் வளர்க்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, பாதாள உலகத்திற்கு கடந்த காலங்களைப் போல அரசியல் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று அவர் நாடாளுமன்றத்தில் இன்று குறிப்பிட்டார்.
அத்தோடு, எந்தவொரு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது அமைச்சரோ பாதாள உலகத்துடன் தொடர்புகளைப் பேணுவதில்லை என்றும் அவர் கூறினார்.
சந்தேக நபர்களின் கைதுகள்
இதேவேளை, இரண்டு, மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இன்னும் கைது செய்ய வேண்டியுள்ளதாகவும், ஆனால் சமீபத்திய குற்றங்களில் சந்தேக நபர்கள் சில மணி நேரங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில், பாதாள உலகத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக சில நடவடிக்கைகளை வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
