இடித்தழிக்கப்பட்ட வெடுக்குநாரி சிவன் ஆலயம் - களத்தில் நேரடி ஆய்வில் மனித உரிமை ஆணைக்குழு!
வவுனியா வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்ட சிவன் சிலைகள் மற்றும் வழிபாட்டு பொருட்கள் உடைத்து எறியப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனையடுத்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர். பிரியதர்சன, நேற்று வியாழக்கிழமை சென்று பார்வையிட்டுள்ளார்.
நேரடி ஆய்வு
அவ்வாறு வெடுக்குநாரி மலைக்கு செல்வதற்கு முன்னர் நெடுங்கேணி காவல் நிலையத்திற்கு சென்று தகவல் அறிந்து கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவர், வெடுக்குநாரி மலைக்கு சென்று ஆலய சூழல் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்துள்ளார்.
விசாரணை முன்னெடுப்பு
வெடுக்குநாரி மலை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
