அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டவர்களின் பதவியை பறித்த மைத்திரி!!
அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் பதவி ஏற்றால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளையும் பறிக்க வேண்டும் என மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியில் இருந்து ஆதரவளிக்க மாத்திரமே தீர்மானம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கம் எடுக்கும் சாதகமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மாத்திரமே தீர்மானித்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அமைச்சர்களான மஹிந்த அமரவீர மற்றும் நிமல் சிறிபால ஆகியோரை அவர்கள் வகிக்கும் அனைத்துக் கட்சிப் பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.