30 வருடகால யுத்தம் முடிவிற்கு வந்திருக்காவிட்டால்..... சிறிலங்காவின் நிலை? அமைச்சர் வெளியிட்ட தகவல்

sri lanka war sm chandrasena
By Vanan Sep 14, 2021 07:06 PM GMT
Report

சிறிலங்காவில் 30 வருடகால யுத்தம் முடிவிற்கு வந்திருக்காவிட்டால், இஸ்ரேல் - பலஸ்தீனத்தை ஒத்த நிலையில் சிறிலங்கா தற்போதும் போராடிக் கொண்டிருக்கும் என்பதை சர்வதேசம் விளங்கிக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டமைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிருப்தி வெளியிட்ட நிலையில், கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதற்கு பதிலளித்த காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்தாது என்ற வாக்குறுதியை அளித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாங்கள் அவசரகாலச் சட்டத்தை சீனி, அரிசி பதுக்கல் செய்தவர்களுக்கெதிராக நுகர்வோர் சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியாத காரணத்தினால் தான் கொண்டுவந்தோம்.

அவசரகாலச் சட்டத்தை குப்பை மேடு சரிந்த சந்தர்ப்பத்தில் நல்லாட்சி அறிவித்தது. இருப்பினும் இன்று உலகம் நெருக்கடியை சந்தித்திருக்கும் நிலையில் இருக்கின்ற அத்தியாவசியப் பொருட்களை சரிவர விநியோகம் செய்யவே அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. ஆகவே அவசரகாலச் சட்டத்தை எந்தச் சந்தர்ப்பத்திலும் முறைகேடாகப் பயன்படுத்த மாட்டோம்.

ஜனாதிபதி சத்தமாக இருமினாலும், கொட்டாவி ஏற்பட்டாலும் அதனைக்கூட சர்வதேசம் வரை கொண்டுசெல்கின்ற தரப்பினர் இருக்கின்றார்கள். அதனை தடுக்க முடியாது.

அவசரகாலச் சட்டம் என்பது எமது நாட்டில் மாத்திரமன்றி, ஜனநாயகவாத நாடாளுமன்றம் உள்ள நாடுகளிலும் அவசரகாலச் சட்டம் அமுலாகியிருக்கின்றது.

கொவிட் போன்ற சுனாமி போன்ற சந்தர்ப்பங்களில் இராணுவம் மாத்திரமன்றி அரச பொறிமுறையை செயற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது. வரலாற்றில் இதுபோன்ற இடர் சந்தர்ப்பங்களிலும் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜெனீவா அல்ல, அதற்கும் அப்பால் இந்த விடயத்தை கொண்டுசெல்கின்றார்கள். ஆனாலும் அதனைத் தடுக்க முடியாது. எமது நோக்கம் நேர்மையானது என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026