சிறைக்குள் சிக்கிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் : வெளியான பின்னணி
போதைப்பொருள் கடத்தல்காரர்களான "கனேமுல்ல சஞ்சீவ" மற்றும் "வெலே சுதா" ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையின் அறைகளுக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் பல தொலைபேசி பாகங்கள் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் ஏ பிரிவில் உள்ள விசேட பிரிவின் பல அறைகளில் நேற்றையதினம் (12.10.2024) திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கனேமுல்ல சஞ்சீவ' அடைக்கப்பட்டுள்ள அறைக்குப் பின்னால் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்தடன் சமந்த குமார எனப்படும் 'வெலே சுதா' தடுத்து வைக்கப்பட்டுள்ள அறைக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல கையடக்க தொலைபேசி உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |