கைவிடப்பட்ட நிலையில் கல்முனை மத்திய பேருந்து நிலையம் : நடவடிக்கை எடுப்பது யார்?

Sri Lanka Kalmunai Sonnalum Kuttram
By Independent Writer Apr 08, 2025 08:39 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

கல்முனை (Kalmunai) மத்திய பேருந்து நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையம் நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுவதால் பயணிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த பேருந்து நிலைய கட்டடம் மழை காலங்களில் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கைவிடப்பட்ட நிலையில் கல்முனை மத்திய பேருந்து நிலையம் : நடவடிக்கை எடுப்பது யார்? | Social Disorder At Kalmunai Central Bus Station

பேருந்து நிலைய நிலையக் கட்டடமும் மோசமான நிலையில் காணப்படுவதோடு, அப்பிரதேசங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும்,பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கல்முனை பேருந்து நிலையநிலையத்திலிருந்து கொழும்பு (Colombo), யாழ்ப்பாணம் (Jaffna) ,புத்தளம் (Puttalam), மன்னார், குருநாகல், கட்டுநாயக்க விமான நிலையம் ஆகிய இடங்களுக்கு நாளாந்தம் பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன.

பேருந்து நிலையத்தின் மேல் கட்டடத்தில் பல்வேறு துர்நடத்தைகளுக்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கைவிடப்பட்ட நிலையில் கல்முனை மத்திய பேருந்து நிலையம் : நடவடிக்கை எடுப்பது யார்? | Social Disorder At Kalmunai Central Bus Station

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை கல்முனை தலைமையக காவல்நிலையம் மற்றும் கல்முனை மாநகர சபை ஆகியவற்க்கு அருகாமையில் உள்ள இப்பேருந்து நிலையத்தில் இவ்வாறு நிலைமை காணப்படுவது துரதிஸ்ட வசமாகும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பேருந்து நிலையத்தின் கூரைகள் பயணிகள் மீது இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தினை உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைவிடப்பட்ட நிலையில் கல்முனை மத்திய பேருந்து நிலையம் : நடவடிக்கை எடுப்பது யார்? | Social Disorder At Kalmunai Central Bus Station

சிகிச்சைகளுக்கு பின்னர் முதல்முறையாக மக்களை சந்தித்தார் பாப்பரசர்

சிகிச்சைகளுக்கு பின்னர் முதல்முறையாக மக்களை சந்தித்தார் பாப்பரசர்

ஞாயிற்றுக்கிழமைகளில் மேலதிக வகுப்பு தொடர்பில் எடுக்கப்படவுள்ள முடிவு

ஞாயிற்றுக்கிழமைகளில் மேலதிக வகுப்பு தொடர்பில் எடுக்கப்படவுள்ள முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026