காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச மாநாடு! முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல் நேற்று (12-08-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.

இதற்கான முழுமையான ஆதரவை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் திரட்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




