'எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணுங்கள்...' நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள்
protest
jvp
fuel crisis
By Jaso
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணக் கோரி நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் தொடர் போராட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஏற்பாடு செய்துள்ளது.
மக்கள் அவதியுறும் எண்ணெய் மற்றும் மின்சார நெருக்கடிக்கு உடனடி தீர்வு' என்ற தொனிப்பொருளில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.
கொழும்பில் இன்று ஆரம்பமான இந்த தொடர் போராட்டம். களுத்துறை, பாணந்துறை, கம்பஹா, புத்தளம், கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, மொனராகலை, மாத்தளை, அனுராதபுரம், அம்பாறை, குருநாகல் ஆகிய இடங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்