மகனின் அரசியல் பிரவேசம் -மைத்திரி வெளியிட்ட அறிவிப்பு
மகனின் அரசியல் பிரவேசம்
அனைவரின் வேண்டுகோளுக்கிணங்கவே தனது மகன் தம்ம சிறிசேனவை அரசியலுக்கு கொண்டு வந்ததாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மற்றபடி குடும்ப அரசியல் இல்லை என்று கூறும் அவர், தான் அதிபர் பதவியில் இருக்கும் வரை தனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என அப்போது தெரிவித்திருந்ததாக கூறினார்.
ஒரே குரலில் ஏற்றுக் கொண்டனர்
தம்மசிறிசேன அரசியலுக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர் பொலனறுவை பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் செயற்பாட்டாளர்களிடம் இது தொடர்பில் வினவியபோது அனைவரும் ஒரே குரலில் ஏற்றுக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மேற்கு தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது புதிய நியமனத்தைப் பயன்படுத்தி மக்களுக்காக பணியாற்றுவேன் என தஹாம் சிறிசேன தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.