குண்டுகளின் பயங்கர சத்தம் நிறுத்தப்பட வேண்டும்! போப் லியோ XIV எச்சரிக்கை
ஈரானில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர போப் லியோ XIV அழைப்பு விடுத்துள்ளார்.
மோதல் லெபனான் உட்பட முழு மத்திய கிழக்கையும் ஸ்திரமின்மைக்கு ஆளாக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வன்முறையின் அதிகரிப்பு
இன்றைய ஏஞ்சலஸ் பிரார்த்தனைக்குப் பிறகு விசுவாசிகளிடம் உரையாற்றிய அவர், ஈரான் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து வந்த செய்திகள் தன்னை ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கூறியுள்ளார்.

வெறுப்பு மற்றும் பயம் நிறைந்த தற்போதைய சூழலில், இந்த மோதல் மேலும் பரவி லெபனான் போன்ற நாடுகள் மீண்டும் நிலையற்றதாக மாறும் என்ற அச்சம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வன்முறை மேலும் அதிகரிப்பதற்கு முன்பு அதை நிறுத்த அனைத்து தரப்பினருக்கும் தார்மீக பொறுப்பு உள்ளது என்று போப் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் குரல்
இந்நிலையில், “குண்டுகளின் பயங்கரமான சத்தம் நிறுத்தப்பட வேண்டும், ஆயுதங்கள் மௌனமாக்கப்பட வேண்டும், மக்களின் குரல் கேட்கும் உரையாடல் சூழல் உருவாக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்." என அவர் கூறியுள்ளார்.

மேலும், அயத்துல்லா அலி கமேனியின் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமை குறித்த கருத்து தெரிவித்துள்ள போப் லியோ, "பரஸ்பர அச்சுறுத்தல்கள் மூலம் அல்ல, நேர்மையான மற்றும் பொறுப்பான பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே அமைதியை அடைய முடியும்" என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |