இஸ்ரேலுக்கு எதிராக ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு! நிரந்தரமாக வெளியேறிய தூதுவர்
ஸ்பெயின் இஸ்ரேலுக்கான தனது தூதரை நிரந்தரமாக திரும்பப் பெற்றுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு ஸ்பெயின் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர மோதல் மோசமடைந்ததே இதற்கு காரணமாகும்.
கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு தடை
அதன்படி, டெல் அவிவ் நகரில் உள்ள ஸ்பெயின் தூதரகம் இனி ஒரு இடைநிலைத் தூதரகத் தலைவர் மூலம் நிர்வகிக்கப்படும் என்று ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Image Credit: The Straits Times
ஸ்பெயின் அரசு தனது துறைமுகங்களிலும் வான்வழியிலும் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு தடை விதித்தது. இது காசாவில் இஸ்ரேல் நடத்திய இராணுவ நடவடிக்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
இந்த முடிவை இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் யூத விரோதமானது என கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஸ்பெயின் எதிர்ப்பு
மேலும், கடந்த ஆண்டு மே மாதத்தில் ஸ்பெயின் பாலஸ்தீன நாட்டை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததற்கும் எதிர்ப்பாக, இஸ்ரேலும் தனது தூதரை ஸ்பெயினில் இருந்து திரும்ப அழைத்தது. தற்போது ஸ்பெயினில் உள்ள இஸ்ரேல் தூதரகமும் இடைநிலைத் தூதரகத் தலைவர் மூலமே செயல்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்களுக்கு ஸ்பெயின் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இருநாடுகளின் உறவு மேலும் பதற்றமடைந்துள்ளது.
இதன்படி, ஸ்பெயின் எடுத்த நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்த இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர், மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் ஸ்பெயின் அடக்குமுறை ஆட்சிகளை ஆதரிக்கிறது என குற்றஞ்சாட்டியிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |