பிரதி சபாநாயகருக்கு வழங்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரும் விருது
மின்சக்தி துறையின் முன்னேற்றத்திற்கு செய்த பங்களிப்புக்காக பிரதி சபாநாயகருக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டுள்ளதாக லீடர் இந்தியா அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு (Ranjith Siyambalapitiya) இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் காலாம் பெயரில் வழங்கப்படும் விசேட விருது வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவருக்கு அப்துல் காலம் விருது வழங்கப்பட்டுள்ளது.
மின்சாரம், புத்தாக்க மின்சக்தி அமைச்சர் என்ற வகையில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, இலங்கைக்குள் புத்தாக்க மின்சக்தியை ஊக்குவிப்பதற்காக மேற்கொண்ட விசேடமான பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின்சக்தி, காற்றாலை மின்சக்தி, அனைத்து வீடுகளுக்கு மின் விநியோகம் உட்பட இலங்கையின் மின்சக்தி துறையின் முன்னேற்றத்திற்கு ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய செய்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுவதாக விருது வழங்கும் பரிந்துரைக்குழுவின் தலைவரும் லீடர் இந்தியா அமைப்பின் தலைவருமான கலாநிதி ஹரி கிருஷ்ணா விருது வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு தெரிவித்துள்ளார்.