மாகாண சபைத் தேர்தல் : அநுர அரசின் அதிரடி நடவடிக்கை
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கவும் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் இன்று (20) கூடிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
விஜித ஹேரத் தலைமையிலான குழு
அத்துடன் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இந்தக் குழுவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்த விசேட குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான முனீர் முலாஃபர், சுனில் வடகல, அருண் ஹேமச்சந்திரா, ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், லக்ஸ்மன் நிபுணஆராச்சி, சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கம், சமன்மலி குணசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க ,சந்தன சூரியஆராச்சி , நிசாம் காரியப்பர் ஆகியோர் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |