அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள சம்பளச் சலுகை
இந்த ஆண்டு (2023) டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கு பல சம்பளச் சலுகைகளை வழங்க அதிபர் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கூறினார்.
இதனை 100 வீதம் உறுதியாக கூறமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்குவது போன்ற சலுகைகள் கிடைக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
காலி கடவத் சத்தரா பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள் குழுவொன்று தமக்குக் கிடைத்த சீருடை கொடுப்பனவு மற்றும் எரிபொருள் கொடுப்பனவின் போதாமை தொடர்பில் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் நாட்டில் தங்கியிருப்பதால் நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட இடையூறு எதிர்வரும் 21ஆம் திகதி அவர்கள் நாட்டிலிருந்து சென்றதன் பின்னர் முடிவுக்கு வரும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதன் பின்னர் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் 100% உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மாலை நேர செய்தி தொகுப்பில் காண்க.