திடீரென உயிரிழந்த தந்தை - நாடு திரும்பிய இளம் வீரர் துனித் வெல்லாலகே
புதிய இணைப்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லாலகே நாட்டை வந்தடைந்துள்ளார்.
அவர் இன்று காலை 08.25 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-392 மூலம் அபுதாபியிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றி இருந்த நிலையில் அவரது தந்தை நேற்று காலமானதால் நாடு திரும்பியுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஆசிய கிண்ணப் போட்டியில் (Asia Cup) பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரர் துனித் வெல்லலாகேவின் தந்தை உயரிழந்துள்ளார்.

துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே தனது 54 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று வியாழக்கிழமை அபுதாபியில் நடைபெற்ற குழு சுற்றுப் போட்டி முடிந்த சில நிமிடங்களில், அணியின் உடைமாற்றும் அறையில் இருந்த போது இந்த துயரச் செய்தி வெல்லலாகேவுக்கு (Dunith Wellalage) தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பெரும் வெற்றி
ஆரம்பத்தில் வீட்டில் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், பின்னர் அவரது தந்தை மரணமடைந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூரிய செய்தியை அறிந்து கண்ணீர் விட்டு ஆறுதல் தெரிவித்தாகவும் ஆப்கானுக்கு எதிரான போட்டியில் பெரும் வெற்றியை பெற்ற இலங்கை அணியினரும் கொண்டாட்டங்களை தவிர்த்து அமைதியாக மைதானத்தை விட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதனைதொடர்ந்து, வெல்லலாகே போட்டிக்குப் பிறகு ஹோட்டலுக்கு திரும்பி, அதிகாலை விமானம் மூலம் கொழும்புக்கு வந்தடைந்துள்ளார்.
இந்நிலையில், துனித் வெல்லாலகே மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்கள் வழியாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 19 மணி நேரம் முன்