இந்தியாவின் முடிவால் மற்றுமொரு நெருக்கடியில் இலங்கை
இந்தியாவின் முடிவு
ரஷ்யா - உக்ரைன் மோதல் காரணமாக கோதுமை மாவு ஏற்றுமதியை இந்தியா இடைநிறுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சு இந்நாட்டின் மாவு இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளது.
அதன் காரணமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாவு இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது துருக்கியில் இருந்து மாவு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
துருக்கியில் இருந்து இறக்குமதி
இந்தியாவில் இருந்து மாவு இறக்குமதியை விரைவாக மேற்கொள்ள முடியும் என்றாலும், துருக்கியில் இருந்து மாவை இறக்குமதி செய்யும் போது சுமார் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது சந்தையில் பாண் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 400 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால் பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

