பிரபல பாடசாலைக்குள் நுழைந்த கும்பல் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்!
அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்குள் மர்ம நபர்கள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தலைக்கவசத்தால் இரு மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் வெளியாட்கள் பாடசாலைக்குள் நுழைந்து பாடசாலை மாணவர்களை தாக்கியுள்ளனர்.
மாணவர்கள் மீது தாக்குதல்
குறித்த பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கு நேற்று மேலதிக வகுப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போதே, தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த இரண்டு மாணவர்களும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அனுராதபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
