விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடிய சிறிலங்கா இராணுவ அதிகாரி கைது
Sri Lanka Army
STF
Liberation Tigers of Tamil Eelam
By Sumithiran
போரின் போது விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கம் என்பவற்றைத் தேடி வந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ லெப்டினன்ட் ஒருவரும் மேலும் மூன்று சந்தேகநபர்களும் மன்னார் தாழ்வுபாடு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
குருநாகல் பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய இராணுவ லெப்டினன்ட் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
ஸ்கானிங் இயந்திரங்கள்
இந்த இராணுவ அதிகாரியிடம் ஆயுதங்கள் மற்றும் தங்கம் என்பவற்றை அதி உணர்திறன் மூலம் கண்டு பிடிக்கும் ஸ்கானிங் இயந்திரங்கள் உள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கடுவெல, வவுனியா மற்றும் அனுராதபுரம் பிரதேசங்களைச் சேர்ந்த 29 முதல் 62 வயதுக்கு இடைப்பட்ட மூவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்