கறுப்பு ஜூலைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் நினைவேந்தல்!
Jaffna
Ilankai Tamil Arasu Kachchi
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Kalaimathy
கறுப்பு ஜூலைக் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமராட்சியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடமாகாண சபை முன்னான் உறுப்பினர்களான ச.சுகிர்தன், கே.சயந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி நடந்த ஜூலைக் கலவரத்தின் போது தமிழர்கள் பலரும் கொல்லப்பட்டதுடன் சொத்துகளும் அழித்து நாசமாக்கப்பட்டன.