ரஷ்யாவிடம் எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்!
ரஷ்யாவிடம் இருந்து அதிகமானளவு எண்ணெய்யை கொள்வனவு செய்ய இலங்கை நிர்ப்பந்திக்கப்படலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
ரஷ்யாவினால் கோதுமை மாவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக கலந்துரையாடல், ராஜதந்திர ரீதியில் ரஷ்யாவுடன் இடம்பெற்று வருவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் பேச்சுவார்த்தை
இதேவேளை, சீனாவுடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறு உதவிகளை வழங்க வேண்டும் என்பதில் சீனா தனிப்பட்ட கொள்கைகளை கொண்டுள்ளன.
சீனா தனிப்பட்ட கொள்கைகளை கொண்டிருந்தாலும் சீனா ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு உதவிகளை வழங்கும் நிலையில் உள்ளதாக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.