வெளிவிவகார அமைச்சின் செயலாளரை சந்தித்த சீன தூதுவர்!
சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவைக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது வெளிவிவகார அமைச்சில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இரு தரப்புக்கும் இடையிலான பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையடப்பட்டுள்ளது.
கடன் பிரச்சினைகள்
குறிப்பாக இலங்கையும் சீனாவும் இராஜதந்திர ரீதியில் நெருக்கமாகப் பணியாற்றவும், இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன் பிரச்சினைகள் தொடர்பான தொழில்முறை பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதேவேளை, சீனத் தூதுவர் இலங்கை எயார்லைன்ஸின் தலைவர் அசோக் பத்திரகேவைச் சந்தித்தும் கலந்துரையாடியுள்ளார்.
🇨🇳Ambassador Qi Zhenhong and 🇱🇰Foreign Secretary Aruni Wijewardane discussed a wide range of topics on Thu (1) morning at @MFASriLanka. They agreed to work closely through diplomatic channel and support the professional negotiations on debt issues, bilaterally & multilaterally. pic.twitter.com/JR2S4nL7e0
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) December 1, 2022
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சிவில் விமான சேவைகள் மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.