ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் பால்
தேங்காய்களின் (Coconu) விலையைக் குறைப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி தேங்காய்ப்பால் அனுமதி மற்றும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு இணைந்து பெற்ற அமைச்சரவை அனுமதிக்கு அமைய, இந்த தேங்காய் பால் கையிருப்பு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தேங்காய்ப்பால்
மார்ச் 2025 இல் அமைச்சரவையின் அனுமதிக்குப் பிறகு, 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான அளவில், தேங்காய் பூ, தேங்காய்பால் அல்லது மா, தேங்காய் துண்டுகள் போன்ற தேங்காய் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதல் இருப்பு இது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த இருப்பு தேங்காய் பால் மா தொழிலுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது, மேலும் இது தொழில்துறைக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்கும் மற்றும் உள்ளூர் சந்தையில் தேங்காயின் விலையைக் குறைக்கும் என்று தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாயத் திணைக்களம்
கொழும்பு துறைமுகத்தில் ஆய்வு செய்ய வேண்டிய அனைத்து நிறுவனங்களிடமிருந்தும், தாவர தனிமைப்படுத்தல் நிறுவனம், தரநிலைகள் நிறுவனம், தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியவற்றிலிருந்து அனுமதி பெற்ற பிறகு, இந்த இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் தொழிற்சாலைகளுக்கு வெளியிடப்பட உள்ளன என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த இருப்பினை நாளை (31.05.2025) காலை 9.00 மணிக்கு ஒருகொடவத்தேயில் உள்ள இலங்கை சுங்க வளாகத்தில், திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
