நாடாளுமன்ற பலப்பரீட்சையில் இறுதியில் கிடைத்த வெற்றி!
Parliament of Sri Lanka
Ranjith Siyambalapitiya
Sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா நாடாளுமன்ற புதிய பிரதி சபாநாயகராக மீண்டும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றியடைந்ததையடுத்து, புதிய பிரதி சபாநாயகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
83 மேலதிக வாக்குகளால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் 65 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மயந்த திசாநாயக்க, வினோ நோக ராதலிங்கம், உத்திக பிரேமரத்ன, இம்ரான் மௌரூப், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஜோன் செனவிரத்ன ஆகியோர் சமூகமளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.