முன்னேற்றம் கண்டது இலங்கை - ஐ.நாவிடம் சென்ற தகவல்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் 77ஆவது அமர்வின் தொடக்கப் பிரிவில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
தொற்றுக்குள்ளனவர்களைக் கண்டறிதல், தொடர்பு தடமறிதல், தனிமைப்படுத்தல் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மூலம் இலங்கை மிகக் குறைந்த இறப்பு வீதத்தையும் அதிக மீட்பு வீதத்தையும் பதிவு செய்துள்ளது.
அரசாங்கம் கிட்டத்தட்ட 100,000 இலங்கையர்களை திருப்பி அனுப்பியதுடன், பெப்ரவரியில் தடுப்பூசித் திட்டத்தை தொடங்கியது.
தொற்றுநோய்களின் போதும் கூட, பல துறைகளில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்தன, ஏற்றுமதித் துறை தொடர்ந்தும் செயற்பட்டு வந்ததுடன், ஜனவரி மாதத்தில் சுற்றுலா மீண்டும் தொடங்கியது.
மத்திய வங்கி கொள்கை விகிதங்களை குறைத்து பல சலுகை மறு நிதியளிப்பு திட்டங்களை செயற்படுத்தியது. நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார்.