சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம்
Sri Lanka Cricket
By pavan
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் கடந்த 11ஆம் திகதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அது குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் பிரகாரம், எதிர்வரும் 24ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.
வாய்மொழி விவாதம்

நாடாளுமன்றம் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கூடும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு மேலும் தீர்மானித்துள்ளது.
இதன்படி வரும் வெள்ளிக்கிழமை 25ம் திகதி தவிர, ஏனைய தினங்களில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையான காலப்பகுதி வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி