இலங்கை கிரிக்கெட் அணிக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைமை பயிற்சியாளர்
இலங்கை கிரிக்கெட், முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் கெரி கிர்ஸ்டனை இலங்கை ஆண்கள் தேசிய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
இந்த நியமனம் 2026 ஏப்ரல் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அவரது பதவிக்காலம் 2028 ஏப்ரல் 14 வரை இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி கிரிக்கெட் வீரர்
கெரி கிர்ஸ்டன், தென்னாபிரிக்கா சார்பில் விளையாடிய முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்ததுடன், 2008 முதல் 2011 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றினார். அந்த காலத்தில் இந்தியா ஐசிசி ஆடவர்களுக்கான உலகக் கோப்பையையும் வென்றது.

பின்னர் 2011 முதல் 2013 வரை அவர் தென்னாப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தபோது, அந்த அணி அனைத்து வடிவங்களிலும் உலக தரவரிசையில் முதல் இடத்தை பெற்றது.
சமீபத்தில், நம்பிபியா அணிக்கு ஆலோசகராக ஐசிசி ஆண்கள் ரி20 உலகக் கோப்பை 2026 போட்டியில் பணியாற்றியிருந்தார்.
2027 கிரிக்கெட் உலகக் கோப்பை
1993 முதல் 2004 வரை நீண்ட அவரது விளையாட்டு வாழ்க்கையில், Test மற்றும் ODI போட்டிகளில் மொத்தம் 14,087 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 21 Test சதங்களும் 13 ODI சதங்களும் அடங்குகின்றன.

இந்த நிலையில், இலங்கை அணியை 2027 ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயார்ப்படுத்துவது அவரது முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக இருக்கும்.
அந்த உலகக்கோப்பை போட்டி தென்னாபிரிக்கா, நம்பிபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |