கொடூரமான ரணிலின் ஆட்சியை வீழ்த்துவோம்! அநுரகுமார அழைப்பு
காலி முகத்திடலில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கு எதிராக ஒன்றுதிரள்வோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காலி முகத்திடலில் போராட்டக்காரர்களை கொடூரமாக தாக்கிய ரணில் - மொட்டு ஆட்சியை வீழ்த்துவோம் என்றும் இதற்கு எதிராக அணி திரளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ත්රාඩ රනිල්-පොහොට්ටු ආණ්ඩුවේ Galleface ම්ලේච්ඡ ප්රහාරයට එරෙහිව පෙළගැසෙමු!
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) July 22, 2022
Let,s bring down the brutal Ranil-Pohottuwa regime that viciously attacked the protesters at Galle Face
முப்படையின் அடாவடியை எதிர்த்து போராட்டம்
முப்படையினர் இணைந்து காலி முகத்திடல் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து நள்ளிரவில் போராட்டக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டு போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதலும் மேற்கொண்டனர்.
இந்நிலையில், தற்பொழுது அதற்கு எதிராக பெருமளவிலான போராட்டக்காரர்கள் இணைந்து கோட்டை பகுதியில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி, இராணுவத்தின் அடாவடியை எதிர்த்து கொழும்பில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்கார்கள்: நாட்டு மக்களுக்கு பகிரங்க அழைப்பு