இடைவிடாது தொடரும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம்: திண்டாட்டத்தில் அநுர அரசு!
வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் வைத்திய தொழிற்சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ (Nalinda Jayatissa) வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அநுராதபுர வைத்தியசாலையின் தற்காலிக இயக்குநரும், நிர்வாகமும் வைத்தியசாலையின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் அமைச்சர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கடும் சிரமத்தில் மக்கள்
தொடர்ந்தும் உரையாற்றி அமைச்சர், “வட மத்திய மாகாணத்தில் மாகாண வாரியாக வேலைநிறுத்தம் நடத்தப்போவதாக GMOA முன்பு கூறியிருந்தது, ஆனால் அவர்கள் திடீரென்று நாடு முழுவதும் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
சந்தேக நபர் 36 மணி நேரத்திற்கு முன்பே கைது செய்யப்பட்டதால் இது நியாயமற்றது, மேலும் வைத்தியர்களிள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பிற வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நோயாளிகளைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். திடீர் வேலைநிறுத்தத்தால் மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.”என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்