மத்திய கிழக்கு மோதல்களில் இலங்கை எந்தப் பக்கமும் சாராது
மத்திய கிழக்கு மோதல்களில் இலங்கை அரசாங்கம் எந்தப் பக்கமும் சாராதென்பதை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இயல்புநிலைக்கு குந்தகம் ஏற்படாது பணிகளைத் தொடரும் முன்னேற்பாடுகள் பற்றியும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று (17) விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய அவர், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருடனும்கலந்துகொண்டார்.
இதன்போது அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
எரிபொருள் தேவை
மேலும் கண்டறிக நிகழ்நிலை செய்திகள் அணுகல் மின் தாள் சந்தா செய்தித்தாள் விளம்பரம் புதுப்பிக்கப்படும் தகவல் கட்டமைப்பைப் பேணி அவற்றை மீளாய்வு செய்து, உருவாகியுள்ள சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்வை தொடர்ச்சியாக முன்னெடுக்கத், தேவையான முழுமையான தலையீடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

எரிபொருள் சிக்கனத்துக்கு முன்னுரிமை வழங்கி குறைந்தபட்ச எரிபொருள் பாவனையில்,இயல்பு நிலையை முன்னெடுப்பதற்கான சாத்தியங்களும் இதில்,கவனத்தில் கொள்ளப்பட்டது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்படாதிருப்பதற்கான முன்னேற்பாடுகளையும் ஜனாதிபதிக்கு அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.
சுற்றுலாத் துறையின் எரிபொருள் தேவைகளைக் கண்டறிந்து, முன்னைய QR முறையைப் பேணுவது குறித்தும், ஹோட்டல்களுக்குத் தேவையான எரிவாயு மற்றும் எரிபொருள் வசதிகளை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பலநாள் கடற்றொழில் படகுகள் மற்றும் துறைமுக நடவடிக்கைகளுக்கு எரிபொருள் வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருவதோடு, ஒதுக்கீடு செய்யப்பட்ட எரிபொருள் அளவில் உள்ள சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |