வட பகுதியை கண்டுகொள்ளாத கோட்டாபய! புலம்பெயர் தமிழர்கள் கொடுத்த அடி
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர் தமிழர்களுக்கு வெறும் அழைப்பை மாத்திரம் விடுத்ததாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவரது ஆட்சி காலத்தில் வடமாகாணத்திற்கு குறைந்தளவான பயணங்களையே மேற்கொண்டதாகவும் கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பை விடுத்தார். ஆனால் எவரும் முதலீடுகளை மேற்கொள்ளவில்லை.
அரசியல், பொருளாதார, மற்றும் சமூக பிரச்சினைகளை தீர்க்க நாம் முன்வைத்த திட்டங்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேச உதவிகளின்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
சர்வதேச உதவிகள் மிக முக்கியம்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க சர்வதேச உதவிகள் மிக முக்கியம். எனவே சர்வதேச உறவுகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு சர்வதேச உதவிகளை பெறாத நிலையில் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் ” என்றார்.
YOU MAY LIKE THIS