மூளைசாலிகளின் வெளியேற்றம் : அரசாங்கம் ஏன் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை..!

International Monetary Fund Tissa Attanayake Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka
By Beulah Sep 19, 2023 03:09 AM GMT
Report

“வெளிநாட்டுக் கடன்களை தொடர்ந்தும் மீள செலுத்த முடியாது என்ற நிலைபாட்டிலேயே அரசாங்கம் காணப்பட்டால் , சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாது.கடனை மீளப் பெறுதல் மாத்திரமின்றி, சர்வதேசத்தின் மத்தியிலும் அங்கீகாரத்தைப் பெற முடியாத நிலைமை ஏற்படும்.”

இவ்வாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றைய தினம் (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கரிசனை

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கரிசனை

மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியம்

“இதுவரையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் 30 சதவீதம் மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளது. 70 சதவீதமான நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

மூளைசாலிகளின் வெளியேற்றம் : அரசாங்கம் ஏன் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை..! | Sri Lanka Economic Crisis Tissa Attanayake

இவற்றுக்கு மத்தியில் நாட்டிலிருந்து மூளைசாலிகள் வெளியேறுகின்றமையானது சகல துறைகளிலும் பெரும் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது.

இதற்கு சிறந்த உதாரணம் சிறிலங்கன் எயார் லைன்ஸ் சேவையிலிருந்து 60 விமானிகள் விலகியுள்ளனர்.

விமானிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட மூளைசாலிகளின் வெளியேற்றத்தினைத் தடுப்பதற்கு அரசாங்கம் ஏன் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை?

தற்போது முழு நாட்டினதும் பொருளாதாரம் பாரிய சரிவினை எதிர்கொண்டுள்ளது. இவை ஒரு புறமிருக்க மறுபுறம் குற்றச்செயல்களும் பாரியளவில் அதிகரித்துச் செல்கின்றன.

குற்றச்செயல்கள் 

தற்போது நாட்டில் மாதமொன்றுக்கு சுமார் 30 கொலைகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறான பிரச்சினைகள் மாத்திரமின்றி கடந்த வருடத்தில் 3406 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

மூளைசாலிகளின் வெளியேற்றம் : அரசாங்கம் ஏன் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை..! | Sri Lanka Economic Crisis Tissa Attanayake

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் தரவு திணைக்களத்தின் ஆய்வொன்றில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் பொருளாதார நெருக்கடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனல் 4 காணொளி 

சனல் 4 காணொளி விவகாரம் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தரப்பினரின் கருத்துக்கும், பாதுகாப்பு அமைச்சின் கருத்துக்கும் இடையில் பரஸ்பரம் காணப்படுகிறது.

மூளைசாலிகளின் வெளியேற்றம் : அரசாங்கம் ஏன் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை..! | Sri Lanka Economic Crisis Tissa Attanayake

பாதுகாப்பு அமைச்சு இதனை முற்றாக நிராகரித்துள்ள போதிலும், அதிபரின் தரப்பினர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இதற்கு முன்னர் 3 வழிமுறைகளில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களையும் , சனல் 4 வெளியிட்டுள்ள விடயங்களையும் அடிப்படையாகக் கொண்டு சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

இதன் மூலம் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது வெளிப்படுத்தப்படும்.” என்றார்.  

சனல் 4 காணொளி விவகாரம் : பிள்ளையான் வெளியிட்ட தகவல்

சனல் 4 காணொளி விவகாரம் : பிள்ளையான் வெளியிட்ட தகவல்

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021