திருகோணமலையில் விவசாயிகளின் வெட்டு இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் (படங்கள்)
எரிபொருள் விநியோகம்
திருகோணமலையில் விவசாயிகளின் வெட்டு இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவின் வழிகாட்டலின் கீழ் இன்று(16) காலை குறித்த எரிபொருள் விநியோகம் இடம் பெற்றுள்ளது.
திருகோணமலையில் சிறுபோக வேளாண்மை பயிர் செய்கை செய்து அறுவடைக்கு தேவையான எரிபொருள் இல்லாது காத்திருக்கும் விவசாயிகளுக்கே எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கருக்கு 10 லீற்றர் டீசல்
திருகோணமலை லிங்கன் நகரில் உள்ள ஐ ஓ சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 22 விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 10 லீற்றர் டீசல் வீதம் மொத்தமாக 65 ஏக்கருக்கு 650 லீற்றர் டீசல் விநியோகி்க்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக உப்புவெளி கமநல அபிவிருத்தி பிரிவுக்குட்டபட்ட விவசாயிகளுக்கு குறித்த எரிபொருள் விநியோகம் இடம் பெற்றுள்ளது.
மேலும் இவை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் கட்டம் கட்டமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.