இலங்கை தொடர்பில் எச்சரிக்கை மணி
உணவு தட்டுப்பாட்டு
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.
உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் காணொளி ஊடான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில் இவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ தவறான விவசாய கொள்கையினால் நாடு பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும் என்பதை கடந்த வருடம் மே மாதத்தில் இருந்து அரசாங்கத்திடம் குறிப்பிட்டோம்.
அறிவியல் ரீதியிலான ஆலோசனை
அறிவியல் ரீதியிலான காரணிகளுக்கு அரசியல் காரணிகள் மதிப்பளிக்காததன் விளைவைத் தான் தற்போது எதிர்க்கொள்கிறோம். எதிர்வரும் காலங்களிலும் எதிர்க்கொள்ள நேரிடும்.
சுதந்திரம் பெற்ற காலத்தின் பின்னர் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் விவசாயத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கி விவசாயத்துறையை முன்னேற்ற சிறந்த திட்டங்களை செயற்படுத்தின.
இருப்பினும் 2019ஆம் ஆண்டிற்கு பின்னரான அரசாங்கம் அறிவியல் ரீதியிலான ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்காமல் உரம் தொடர்பில் முன்னெடுத்த தவறான தீர்மானத்தினால், 72 வருடகால விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது” என்றார்.