வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள கோட்டாபயவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு மீண்டும் கோரிக்கை!

Human Rights Council United Nations Missing Persons Michelle Bachelet Sri Lanka
By Kalaimathy Aug 23, 2022 09:23 AM GMT
Report

நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபருக்கு தமிழ் இனப்படுகொலையில் தொடர்பு இருப்பதாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த தாய்மார்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பும் யோசனையையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஐ.நா கூட்டத் தொடரில் மிச்சேல் பச்லெட்டின் விசேட அறிக்கை

வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள கோட்டாபயவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு மீண்டும் கோரிக்கை! | Sri Lanka Former President Gotabaya United Nation

இது தொடர்பில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மாவட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் வவுனியா நகரசபையில் வார இறுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் சுமார் ஒரு மாத காலத்திற்கு ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான பரிந்துரைகளுடன் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டின் விசேட அறிக்கையும் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள கோட்டாபயவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு மீண்டும் கோரிக்கை! | Sri Lanka Former President Gotabaya United Nation

இதேவேளை தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்ட கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51ஆவது கூட்டத்தொடரில், கட்சிகள் தமது முன்மொழிவுகள் அடங்கிய இரண்டு கடிதங்களை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளன.

தமிழ் மக்களை படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோரை சர்வதேச இராணுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களுக்கு நீதி கோரும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என லீலாதேவி ஆனந்த நடராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பூர்வீக பிரதேசத்தில் உள்ள விகாரைகளை அகற்ற நடவடிக்கை

வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள கோட்டாபயவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு மீண்டும் கோரிக்கை! | Sri Lanka Former President Gotabaya United Nation

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழர்கள் எதிர்நோக்கும் ஆறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க தலையிடுமாறு கோரி இரண்டாவது கடிதத்தை அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் இராணுவம் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள தனியார் காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட அவர்களது உறவினர்களின் தலைவிதியை வெளிப்படுத்துதல், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண வாக்கெடுப்பு நடத்துதல், தமிழர்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில், பௌத்த விகாரைகளை அகற்றுவதற்கும், மக்களின் வாழ்வில் இடையூறு விளைவிக்கும் வகையில் வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை அகற்றுவதற்கும் தலையிடுமாறு கோரி கடிதம் அனுப்பவுள்ளதாகவும் லீலாவதி ஆனந்த நடராஜா மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026