எரிபொருளுடன் வருகிறது மற்றொரு கப்பல் - காத்திருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
எரிபொருள் ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றி வரும் கப்பல் நாளை 15 ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமன்றி பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றி வரும் மேலும் சில கப்பல்கள் அடுத்த வாரம் நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கொள்வனவுக்கான கொடுப்பனவுகள் வழங்கல்
அதேவேளை நாளைய தினம் எரிபொருளை ஏற்றி வரும் கப்பலுக்கான உரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் இன்னமும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் எரிபொருள் பெற வரிசையில் காத்திருக்கின்றனர்.
எரிபொருள் தாமதம் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோதல்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
