எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம் - காவல்துறை உத்தியோகத்தரைத் தாக்கிய இராணுவ சிப்பாய்!
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் இராணுவ சிப்பாய்க்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வரகாபொல தும்மலதெனிய பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவருக்கும் காவல்துறை உத்தியோகத்தருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது இராணுவ சிப்பாய் மற்றும் காவல்துறை உத்தியோகத்தருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அதன் போது இராணுவ சிப்பாயால் தாக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று வரகாபொல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.