இரண்டாவது கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டது! கஞ்சன வெளியிட்ட தகவல்
இலங்கையடைந்த இரண்டாவது நிலக்கரி கப்பலுக்கான முற்கொடுப்பனவு நடவடிக்கைகள் நேற்றைய தினம் (30) நிறைவடைந்ததாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவர் இந்த விடயத்தை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை 35,000 மெட்ரிக் டன் 92 ஒக்டேன் பெட்ரோலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இறக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு
இந்நிலையில், முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை 15 லீற்றராக அதிகரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு எரிசக்தி அமைச்சரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டால் உயர்த்தப்பட்ட முச்சக்கர வண்டி கட்டணமும் குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் சுதில் ஜெய்ருக் சுட்டிக்காட்டியுள்ளார்.
Fuel + Coal Update -
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 30, 2022
Advance Payment completed today for the 2nd Cargo of Coal. Cargo procured by advancing the balance cargos from last years term tender. New tenders to procure the full requirements.
Full payment made for 35,000 MT 92 Petrol Cargo & commenced unloading.