வன்முறைச் சம்பவத்தின் போது காணாமல் போன துமிந்தவின் துப்பாக்கி!
சிறிலங்காவில் கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து ஏற்பட்ட வன்முறையில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக முறைப்படு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வட மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் எச்.பீ. சேமசிங்கவின் வீட்டின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மத்தியில் அவர்களுக்கு சொந்தமான பொருட்கள் காணாமல் போயுள்ளதாக அனுராதபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த பதிவு செய்யப்பட்ட 9 எம்.எம். கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக அவரது சகோதரர் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எச்.பீ. சேமசிங்கவின் வீட்டில் இருந்த 60 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சேமசிங்க முறைப்பாடு செய்துள்ளார்.
கொள்ளையிடப்பட்ட ஆபரணங்கள் தனது மனைவிக்கு சொந்தமானது எனவும் அதன் பெறுமதி ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் எனவும் சேமசிங்க தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.