சடுதியாக அதிகரிக்கும் எரிவாயுவின் விலை- வெளியானது அறிவிப்பு!
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 6,000 ரூபாவை விட அதிகரிக்கும் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
அதேவேளை லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
2,500 மெட்ரிக் தொன்கள் எரிவாயுவுடன் கூடிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை மீள ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
அதுவரை வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது.