அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதற்கான பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதாகவும், அதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பளத்திற்கு தீர்வு
இந்தப் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்கப்பட வேண்டுமாயின் பதில் அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டுமென தெரிவித்த அவர் சில நாட்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதில் அதிபராக நியமித்து அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தாவிட்டால் இந்த மாதம் 25ஆம் திகதி அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளங்களை வழங்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இன்று (13) ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தால் இக் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தாத சூழ்நிலை காணப்படுகிறது.