இந்நிலை தொடர்ந்தால் கோட்டாபயவிற்கே பாரிய பிரச்சினை!

president india media sri lanka protest ranil interview gotabaya
By Kalaimathy Apr 08, 2022 08:53 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அது அரச தலைவருக்கு பிரச்சினையாக மாறும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் உணர்வுகள் தங்களிற்கு எதிராக மாறியுள்ள போதிலும் சிறிலங்கா அரச தலைவராலும் பிரதமராலும் தொடர்ந்து எவ்வாறு பதவியில் நீடிக்க முடிகின்றது என ரணில் விக்ரம சிங்கவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், 

“அரச தலைவரைப் பொறுத்தவரை அவர் ஐந்து வருடங்களிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேவேளை அவர் வீட்டிற்கு செல்லவேண்டும் என ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நிலையில்,  ஆட்சியை விட்டு போவதா இல்லையா என்பதை தீர்மானிக்கவேண்டியது அவரே.

அவர், தான் பதவி விலகப்போவதில்லை. எனினும் புதிய அமைச்சரவைக்கு தலைமை தாங்கப்போவதாக எமக்கு தெரிவித்துள்ளார். அடுத்தவாரம் இந்திய கடனுதவியின் கீழ் பல பொருட்கள் வரவுள்ளதால் பல விடயங்களிற்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அனைத்து விடயங்களிற்கும் தீர்வு காணப்படுமா என்பது எனக்கு தெரியாது. தொடர்ந்தும் மின்வெட்டு நீடிக்கப்போகின்றது. ஆனால் அவற்றின் காலம் குறையும். நிச்சயம் சில தட்டுப்பாடுகள் காணப்படும். பிரதமரை பொறுத்தவரை அவர் தற்போது மிகச்சிறிய பெரும்பான்மையை கொண்டுள்ளார்.

சுமார் 40 உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளனர். எதிர்கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மூன்று அல்லது நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வித்தியாசமே காணப்படுகின்றது.

அடுத்த சில நாட்களில் அந்த நான்கைந்து பேரும் அரசாங்கத்திலிருந்து விலகுவார்கள். அரசாங்கம் பெரும்பான்மை இழக்கும் நிலையை ஏற்படுத்துவார்கள் என பலர் கருதுகின்றனர். இதன் பின்னர் என்ன நடக்கும் என்பது வெளிப்படையான விடயம்.

பிரதமர் பதவி என்பது தங்களால் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறமுடியும் என்பதிலேயே தங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை உணர்கின்றனர். மேலும் சிலர் விலகினால் தங்களிற்கு பெரும்பான்மை இல்லை என அவர்கள் உணர்கின்றனர்.

அதேவேளை எதிர்க்கட்சி என்பது தனியொரு கட்சியில்லை. பல குழுக்கள் உள்ளன. தேவையான 113 பெரும்பான்மை பெறவேண்டும். மாற்று அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்றால் அவர்கள் ஐக்கியப்பட வேண்டும், ஒன்றிணைய வேண்டும்.

அரச தலைவரை  பொறுத்தவரை அவர்கள் மக்களின் மனோநிலையை அவதானிக்கவேண்டும் மக்கள் தான் சொல்வதை ஏற்கப்போகின்றார்களா அல்லது அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போகின்றார்களா என்பதை அவர் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அது அவருக்கு பிரச்சினையாக மாறும்” என  தெரிவித்தார்.

அதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தின் அளவு உங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளதா? என கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கையில்,

“இவ்வாறான ஆர்ப்பாட்டம் மே, ஜூன் மாதத்திலேயே இடம்பெறும் என எதிர்பார்த்தேன்.

முன்கூட்டியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறித்து நான் ஆச்சரியமடைந்தேன். ஆனால் தற்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உருவாகிக்கொண்டிருந்தது. மின்சாரம் 13 மணித்தியாலங்கள் துண்டிப்பு, பிள்ளைகளால் படிக்க முடியவில்லை, பரீட்சை எழுதுவதற்கு பேப்பர் இல்லை, மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை.

ஆகவே ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிலர் இரண்டுநேரம் மாத்திரம் உண்கின்றனர். இலங்கையர்கள் மூன்று நேரம் உணவுண்டவர்கள்.

விலைகள் அதிகரிக்கின்றன, பணவீக்கம் அதிகரிக்கின்றது. ஆகவே இந்த பிரச்சினைகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ளன” என தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி