இந்நிலை தொடர்ந்தால் கோட்டாபயவிற்கே பாரிய பிரச்சினை!

president india media sri lanka protest ranil interview gotabaya
By Kalaimathy Apr 08, 2022 08:53 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அது அரச தலைவருக்கு பிரச்சினையாக மாறும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் உணர்வுகள் தங்களிற்கு எதிராக மாறியுள்ள போதிலும் சிறிலங்கா அரச தலைவராலும் பிரதமராலும் தொடர்ந்து எவ்வாறு பதவியில் நீடிக்க முடிகின்றது என ரணில் விக்ரம சிங்கவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், 

“அரச தலைவரைப் பொறுத்தவரை அவர் ஐந்து வருடங்களிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேவேளை அவர் வீட்டிற்கு செல்லவேண்டும் என ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நிலையில்,  ஆட்சியை விட்டு போவதா இல்லையா என்பதை தீர்மானிக்கவேண்டியது அவரே.

அவர், தான் பதவி விலகப்போவதில்லை. எனினும் புதிய அமைச்சரவைக்கு தலைமை தாங்கப்போவதாக எமக்கு தெரிவித்துள்ளார். அடுத்தவாரம் இந்திய கடனுதவியின் கீழ் பல பொருட்கள் வரவுள்ளதால் பல விடயங்களிற்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அனைத்து விடயங்களிற்கும் தீர்வு காணப்படுமா என்பது எனக்கு தெரியாது. தொடர்ந்தும் மின்வெட்டு நீடிக்கப்போகின்றது. ஆனால் அவற்றின் காலம் குறையும். நிச்சயம் சில தட்டுப்பாடுகள் காணப்படும். பிரதமரை பொறுத்தவரை அவர் தற்போது மிகச்சிறிய பெரும்பான்மையை கொண்டுள்ளார்.

சுமார் 40 உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளனர். எதிர்கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மூன்று அல்லது நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வித்தியாசமே காணப்படுகின்றது.

அடுத்த சில நாட்களில் அந்த நான்கைந்து பேரும் அரசாங்கத்திலிருந்து விலகுவார்கள். அரசாங்கம் பெரும்பான்மை இழக்கும் நிலையை ஏற்படுத்துவார்கள் என பலர் கருதுகின்றனர். இதன் பின்னர் என்ன நடக்கும் என்பது வெளிப்படையான விடயம்.

பிரதமர் பதவி என்பது தங்களால் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறமுடியும் என்பதிலேயே தங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை உணர்கின்றனர். மேலும் சிலர் விலகினால் தங்களிற்கு பெரும்பான்மை இல்லை என அவர்கள் உணர்கின்றனர்.

அதேவேளை எதிர்க்கட்சி என்பது தனியொரு கட்சியில்லை. பல குழுக்கள் உள்ளன. தேவையான 113 பெரும்பான்மை பெறவேண்டும். மாற்று அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்றால் அவர்கள் ஐக்கியப்பட வேண்டும், ஒன்றிணைய வேண்டும்.

அரச தலைவரை  பொறுத்தவரை அவர்கள் மக்களின் மனோநிலையை அவதானிக்கவேண்டும் மக்கள் தான் சொல்வதை ஏற்கப்போகின்றார்களா அல்லது அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போகின்றார்களா என்பதை அவர் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அது அவருக்கு பிரச்சினையாக மாறும்” என  தெரிவித்தார்.

அதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தின் அளவு உங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளதா? என கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கையில்,

“இவ்வாறான ஆர்ப்பாட்டம் மே, ஜூன் மாதத்திலேயே இடம்பெறும் என எதிர்பார்த்தேன்.

முன்கூட்டியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறித்து நான் ஆச்சரியமடைந்தேன். ஆனால் தற்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உருவாகிக்கொண்டிருந்தது. மின்சாரம் 13 மணித்தியாலங்கள் துண்டிப்பு, பிள்ளைகளால் படிக்க முடியவில்லை, பரீட்சை எழுதுவதற்கு பேப்பர் இல்லை, மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை.

ஆகவே ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிலர் இரண்டுநேரம் மாத்திரம் உண்கின்றனர். இலங்கையர்கள் மூன்று நேரம் உணவுண்டவர்கள்.

விலைகள் அதிகரிக்கின்றன, பணவீக்கம் அதிகரிக்கின்றது. ஆகவே இந்த பிரச்சினைகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ளன” என தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021