ஆண்டு இறுதிக்குள் கோட்டாபய- மகிந்த தலைமையிலான அரசாங்கம் வெடித்துச் சிதறும்!
ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த ஆண்டு தீர்மானகரமான ஆண்டு என அக்கட்சியின் பிரதித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பட்டாளர்களுடனான சந்திப்பின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
2022 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் அரசாங்கம் வெடித்து சிதறிவிடும் என்பது மிகத் தெளிவாக புலப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வெடித்து சிதறும் போது மக்களை பாதுகாக்கக் கூடிய ஒரே தலைமைத்துவத்தை கொண்டுள்ள கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி பல சவால்களை எதிர்கொண்டது. எனினும் கட்சியை வலுப்படுத்த பல தரப்பினர் தற்போது உதவி வருகின்றனர் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.