நெருக்கடிக்குள் சிறிலங்கா!! சஜித் தரப்பு எடுத்துள்ள முடிவு
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவொரு உடன்பாடுகளுக்கோ அல்லது ஆட்சியமைப்பதற்காகவோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் தயாராக இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகளை ஏற்று தேசிய நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவுமாறு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு கணமேனும் தாமதிக்காது உடனடியாக அரசாங்கத்தை வெளியேற்றம் செய்வதே தற்பொழுது மேற்கொள்ளப்பட வேண்டிய விடயமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதனை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊழல் மிக்க அரசாங்கத்துடன், ஒப்பந்த அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியால் ஒருபோதும் மேற்கொள்ளப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில வக்குரோத்தான குழுக்கள் தவறான கருத்தியலை சமூகமயமாக்கி வருவதாகவும், இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி அடிபனியாதெனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.