திருச்சி முகாமில் தீக்குளித்த நபர் - நடப்பது என்ன; வெளியான உண்மை!
தமிழ்நாடு திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. உமா ரமணன் என்ற நபரே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்நிலையில், அருகில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு எரிகாயங்களுடன் தற்பொழுது வைத்தியசாலையில்சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறப்பு முகாம்களில் விசாரணையின்றியும், முடிவின்றியும் நாள்தோறும் அல்லலுறும் நிலையில் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு விடுதலை கோரி போராடி வந்த 20 ஈழ தமிழ் ஏதிலிகள் மனவிரக்தியில் தூக்க மாத்திரையை உண்டு தற்கொலைக்கு முயற்சித்ததையடுத்து திருச்சி அரசினர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மூவர் கவலைக்கிடமாகவுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் தமிழக காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர்களை போராட்டம் செய்ய வேண்டாம் என மிரட்டியதாகவும், தற்கொலை முயற்சி செய்தால் வழக்குப் போடுவோம் என அடித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான காணொளிகளும் வெளியாகி உள்ளன. இவ்வாறான நிலையில், காவல்துறைக்கு பயந்து மருத்துவமனையில் சேர்க்கப்படடவர்கள் ஓர் அறையினுள் ஒளிந்து கொண்டு இருப்பதாகவும், தமிழக காவல்துறையின் உயர் அதிகாரி அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.