சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு கூட வழங்கப்போவதில்லை - திட்டவட்டமாக அறிவித்த அநுர!
சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அத்துடன் சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு கூட வழங்க போதில்லை என கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தேச சர்வகட்சி அரசாங்கத்திற்கு குறிப்பிட்ட காலவரையறை இல்லாத காரணத்தால் தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, சிம்மாசன உரையை ஆற்றிய போது, சர்வகட்சி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கு அனைத்து நாடாளுமன்ற பிரதிநிதிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.
சர்வகட்சி அரசாங்கத்தை ஏற்கத் தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி
அதனையடுத்து இது தொடர்பான யோசனையை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக கடிதம் மூலம் முன்வைத்ததுடன் சில உறுப்பினர்கள் அதற்கு பதிலளித்துள்ளனர்.
இது தொடர்பான பிரேரணைக்கு பதிலளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸ, பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்க, தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலுக்கான அழைப்பை ஏற்க ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.